ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்...
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல "நண்பர்கள்"
எனக்கு கிடைத்த உன் நட்பு போல, அந்த வானத்துக்கும் உன்னுடைய நட்பு கிடைக்கவில்லை என்று வானம் சிந்தும் கண்ணீர் தான் மழை.
என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும் - நான்
மண்ணோடு புதையும் வரை...
நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நட்பை...
"சிறகு கிடைத்த உடன் பறப்பது அல்ல நட்பு... சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு"
நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்..
ஆனால் முடியவில்லை.
ஏன் தெரியுமா?
ரோஜாவை வரைந்து விடலாம்.
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்?
வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'
"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"
நட்பிலும் பிரிவா?
காரணம் இன்றி பிரிதலும் – பின் உணர்ந்து
தோள் சேர்தலும் நட்பில் மட்டும் சாத்தியமா?
பிரிவு தான் அன்பின் ஆழத்தை அழக்குமா?
நட்பு அன்பின் ஆழத்தை அழக்காதா?
என் நீண்ட நாள் நட்பில் வந்த
பிரிவு குறுகியதல்லவே
நீதானே என் உயிரினும் மேலான
ப்ரியசகி அல்லவோ
என் நீண்ட மௌனம்
என் பிரிவை உனக்குச் சொல்லும்
உன் நீண்ட மௌனம்
உன் பிரிவால் எனை வாட்டும்!
அன்று நீ எனை விட்டுப் பரிந்தாய்
என் தோழமை மறக்காது சென்றாய்
அந்த பரிவால் நான் பட்ட வேதனை – அம்மம்மா
உன் உயிரை நாடி மீண்டும் வந்தேன்
உன் வாழ்விற்குள்
கடல்கள் நமை பிரித்தாலும்
வானம் நமை பிரித்தாலும்
இயற்கையும் சூழ்நிலையும் பிரிந்தாலும்
நம் எண்ணங்கள் ஒன்றல்லவா
அதில் பிரிவேது தோழி
நாம் எங்கிருந்த போதும்
நம் நட்பில் பிரிவேது
பிறர் நம் நட்பில் கண்வைத்த போதும்
நம் நட்பில் பிரிவேது
நம் நட்பிலும் பிரிவு
இது சாத்தியமா?
சொல்வாய் என் உயிர்த் தோழி
தோழா .......
அனைத்தும் சொன்னேன்
ஒன்றை மட்டும் விட்டுவிட்டு
உன் மடியில்
தலை சாய்க்க வேண்டும் என்று
அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..
ஆளப்பதிந்த ஈட்டியின் பதிவுகளாய்
கல்லூரித்தாயின் நினைவுகள். – யாரும்
ஓரம்கட்டிவிட முடியாத அந்தப் பசுமையின் உணர்வுகள்.
பட்டப்பெயர் சொல்லி அழைப்பதிலே எமக்கிருந்த
பஞ்சுமிட்டாயின் சுகங்கள்.
கல்லூரியில் எமையாண்ட ராஜாக்கள் காலமது.
அவர்களுக்கு நாம் விட்ட டிமிக்காக்கள் பலவிதம்.
சொல்லில் அடங்காத சிந்தனைச் சிரிப்புக்கள் அவை.
காவ்ரைமோடு களவாக வீடுசென்ற நாட்கள்,
ரிப்போட்டில் போட்ட நண்பனின் திருட்டுக் கையெழுத்து,
மேசையில் எழுதப்பட்டிருந்த நண்பியின் அழியாத பெயர்.
அதற்காய் வாங்கிக்கட்டிய பிரம்படிகள்.
அத்தனையும் சித்தப்பிரமையாய் தித்தித்ததெப்படி?...
விடைகான முடியாத வாலிபலோகம் அது.
சேவிஸ் கிளப், அந்த சைக்கிள் பாக்,
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், மதில் மேலிருந்து பார்க்கும்
கிரிக்கட் மெச், பாதி மீதியாய்ப் பகிர்ந்துண்ணும்
உப்புத்தூள் மாங்காயும் கடலை வடையும்
கற்பனைக்குள் அடங்காத அத்தனை சொர்க்கம்.
பரீட்சைக்காலத்தில் உறங்காத இரவுகள்,
நண்பிகளோடு செய்த பந்தயங்கள்,
கால் புள்ளிக்கூட கணக்குப் பார்த்த காலங்கள்.
அத்தனை கெட்டிக்காரர்களும் கெட்டிக்காரிகளும்
ஒன்றாய் இருந்த வகுப்பறைகள். - இப்போ.....
திக்கொன்று திசையொன்றாய்
எட்டமுடியா தூரங்களில் ஒருபுறம்.
களங்களில் ஆடி
காவியமான வீரர்களாய் மறுபுறம்.
அவர்களுக்காய் ஒரு கணம் தலைகுணிந்து மௌனமாகி
தொடர்வோம் வாழ்க்கையின் படிகளை